திருச்சிராப்பள்ளி, பிப்.1- திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் ஒன்றியம், இனாம்சமயபுரம் ஊராட் சிக்குட்பட்ட போக்குவரத்து குடியிருப்பில் வாடகை வீட் டில் வசித்து வருபவர் தமிழ ரசி. கணவரை இழந்து வசித்து வரும் இவருக்கு பிரபு (32) என்ற மகன் உள்ளார். பிரபுவின் 17-ஆவது வயதில் திடீரென இரண்டு கால்களும் செயலிழந்தன. மேலும் கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்களும் செயல் இழந்தன. இதனால் கடந்த 15 வருடங்களாக படுத்த படு கையாக சிகிச்சை பெற்று வருகிறார். போதிய வரு மானம் இல்லாததால் பிரபு வின் சிகிச்சைக்கும், வாழ்வா தாரத்திற்கும் மிகவும் சிர மப்படும் நிலை உள்ளது. எனவே முழு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந் திர உதவித்தொகை ரூ.3000, பிரபுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வீல்சேர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்களை இல வசமாக வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபுவின் தாயார் வேண்டுகோள் விடுத் திருந்தார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் புதனன்று (பிப்ர வரி 1) செய்தி வெளியிடப்பட் டது. செய்தி அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்தி ரமோகன் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ரமேஷ் ஆகியோர் புதனன்று காலை பிரபுவின் வீட்டிற்கே சென்று வீல்சேரை வழங்கி னர். செய்தி அறிந்து உடனடி யாக உரிய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சிய ருக்கு, பிரபு, அவரது தாயார் தமிழரசி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவித்தனர்.