கோவை, மே 5- பெரும் புயல், வெள்ளம் காலங்களில் பலனை எதிர்பாராமல் உழைத்த மின் ஊழி யர்களின் பணி மகத்தானது என பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் கோவை கிளைகள் சார்பில், மின்வாரி யத்தில் பணிபுரிந்து பணி ஓய்வுபெறும் கம்பி யாளர், மின்பாதை ஆய்வாளர், முகவர் உள் ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் மற்றும் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் மாநிலச் செயலாள ரும், கோவை மாநகர கிளைத் தலைவராக வும் பணியாற்றி பணி ஓய்வுபெறும் வீ.மதுசூ தனன் மற்றும் இளமின் பொறியாளரும், மின் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாள ருமான ஆர்.செபாஸ்டியன் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலு வலகத்தில் சனியன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டலத் தலை வர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். பொருளாளர் எஸ்.கலைச்செல்வி வர வேற்றார். இந்நிகழ்வில் பணி ஓய்வுபெறும் மூவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சி.பத்மநாபன் பேசுகையில், லாப வெறி யோடு செயல்படும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழி யர்கள் விபத்துக்குள்ளானால், அதனை பெரி தாக கண்டுகொள்ளாமல் கடந்து போகும் சூழல் உள்ளது. இனிவரும் காலங்களில் தனி யார் மயம் மேலும் வலுப்பெறும் சூழல் உள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தில் ஆயி ரம் குறைகள் இருந்தாலும் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக செயல்படவும், பாதுகாத்திடவும் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. பணி ஓய்வுபெறு வோர் ஓய்வுக்கு பிறகும் மின்வாரியம் உள் ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட தொடர் பணிகளை செய்ய வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், தமிழ்நாட்டில் பெரும் புயல், மழை, வெள்ளம் காலங்களில் தமிழ் நாடு மின்வாரிய ஊழியர்களின் பணி மகத்தா னது. நேரம் காலம் கருதாமல், சிரமம் பார்க்கா மல் மின் விநியோக பாதிப்பை சீரமைத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கு தமிழ்நாடு மின் வாரியம் அரசு நிறுவனமாக இருப்ப துதான் பிரதான காரணம். இந்த தேசம் மக்க ளுக்கானதாக இருக்க வேண்டும். அனைவ ருடைய நலன்களை பாதுகாக்கும் தேசமாக இருக்க வேண்டும் என தொழிலாளி வர்க் கம் கருதி அரசுத்துறை நிறுவனங்களை பாது காக்க போராட வேண்டும், என்றார். இந்நிகழ்வில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செ யலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலத் தலை வர் டி.ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் மின் ஊழியர் அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன், மேற் பார்வை பொறியாளர்கள் சி.சதீஷ்குமார், எஸ்.செந்தில்குமார், எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடி வில், கோவை தெற்கு செயலாளர் ரத்தினகு மார் நன்றி கூறினார்.