districts

img

இரண்டு மாதமாக குடிநீர் வழங்காததால் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர், ஆக.7-

     பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தில் உள்ளது. மாரியம்மன் கோவில்  தெரு பகுதி. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதி மேடான  பகுதி என்றும், அதனால் தங்கள் வீடு களுக்கு வழங்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பு பகுதியில் பள்ளம் தோண்டி தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.  

    இந்நிலையில் கடந்த பருவமழையின் போது தண்ணீர் தேங்கி, மழைநீர் குடிநீரு டன் கலந்ததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்  பட்டது. இதனையறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளம் தோண்டி குடிநீர் பிடிக்கக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் குழாய் அமைத்து தண்ணீர் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இத னால், இந்தப் பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்  டிக்கப்பட்டு தரைமட்டத்திற்கு மேல் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.  

   ஆனால் கடந்த இரண்டு மாதமாக குடி நீர் இணைப்பு வழங்காததால், இப்பகுதி யில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்  கள் தண்ணீர் எடுப்பதற்காக நீண்ட தூரம்  செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும்  பல மணிநேரம் காத்திருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இத னால் தங்களது வாழ்வாதாரம் பாதித்து அவ திப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரி வித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத தால், திங்களன்று காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து  நிறுத்தி, அவர்களில் சிலரை மட்டும் ஆட்சி யரை நேரில் சென்று பார்த்து மனு அளிக்க  அறிவுறுத்தினர். மனு அளித்த பின்பு, கலைந்து சென்றனர். இருப்பினும் தங்கள் பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் குடி நீர் வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.