districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  போதை மாத்திரை, ஊசி விநியோகம்  திருச்சியில் போதை கும்பல் கைது

திருச்சிராப்பள்ளி, அக்.12 - திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு போதை மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளிலும், போலீசார் ரகசியமாக போதை  கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு  கும்பல் போதை ஊசி விநியோகம் செய்வது  தெரியவந்தது. இதையடுத்து ஆய்வாளர் ராமராஜ் தலை மையிலான போலீசார் அந்த கும்பலை பிடிப்பதற்காக வடவூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து சென்ற மாணவர்கள் சிலருக்கு  போதை மருந்து ஊசியும் விநியோகம் செய்த  அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (32), இப்ரான் (23), சாலை ரோடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ்கான் (23) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு  அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி னர். விசாரணையில், மேற்கண்ட மூன்று  பேரும் சேர்ந்து தனியார் இணையத்தில் (ஆன்-லைனில்) போதை மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளனர். மேலும் மருத்துவர் கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து, அதில் மருத்துவர்கள் போல் கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால்  மூலம் வரவழைத்துள்ளனர். பள்ளி மற்றும்  கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்ப தற்காக நெட்வொர்க் அமைத்து, அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு நாள் தோறும் போதை மருந்துகளை விநியோகம் செய்துள்ளனர்.  இதில் ஊசி மருந்து ஒரு குப்பி ரூ.7-க்கு  வாங்கி, அதனை ரூ.300-க்கு விற்பனை  செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துள்ள னர். இந்த போதை கும்பல் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர்.

தேசிய போட்டிக்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு

பாபநாசம், அக்.12 - இந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபாடி போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மாநில  அளவிலான தெரிவு போட்டியானது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  இதில் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9  ஆம் வகுப்பு பயிலும் நிகிலன் என்ற மாணவர், தேசிய  அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்று உள்ளார். மாணவர் நிகிலனை பள்ளித் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியக் கழகத்தி னர், மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை  பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, அக்.12 - சிஐடியு தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள்  மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  சிஐடியு மாவட்ட அலு வலகத்தில் புதனன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில இணை  ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் பால சுப்பிரமணியன், சம்மேளன பொருளாளர் ரங்கராஜன், மாநிலச் செயலாளர் பன்னீர்செல்வம், சம்மேளன செயலாளர்  மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை தேர்தல் வாக்குறுதி யின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை உத்தரவு (2டி) எண்.62-இன்படி குறைந்தபட்ச கூலியாக மாநக ராட்சிக்கு மாதம் ரூ.21,593, நகராட்சிக்கு ரூ19,450, பேரூராட்சிக்கு  ரூ.17,593 என சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு அறி வித்த ரூ.15,000-ஐ வழங்க வேண்டும். சுழற்சி முறை பணி  செய்ய சொல்வதை கைவிட்டு தொடர்ச்சியாக பணி வழங்க  வேண்டும். ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருவாரூர் முரளி, திருவண்ணாமலை கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாநக ராட்சி ஊழியர் சங்க தலைவர் இளையராஜா நன்றி கூறி னார்.

போதைப் பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

பாபநாசம், அக்.12 - பாபநாசம் ரோட்டரி கிளப், பாபநாசம் ரிவர் சிட்டி  ரோட்டரி கிளப், அறம் அறக் கட்டளை, மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வை துறை இணைந்து போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு  கருத்தரங்கை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ஆர்.டி.பி கல்லூரி கலை யரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி க்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி முருகவேலு, கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் அருள்மணி, பாபநாசம் காவல் ஆய்வாளர் இளங்கோ வன், பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி முதல்வர் முஹமது மொகைதீன், ரோட்டரி உதவி ஆளுநர் அறிவழகன், வலங்கைமான் அறம் அறக் கட்டளை நிறுவனர் ஜெய மனோ கரன் ஆகியோர் பேசினர்.  இதில் பாபநாசம் ரிவர்சிட்டி  ரோட்டரி கிளப் தலைவர் கனி ராஜ், செயலர் அப்துல் ரசீது, பாபநாசம் ரோட்டரி கிளப் பொருளாளர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். 

மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பாபநாசம், அக்.12 - மாற்றுத் திறனாளி மாண வர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், பாபநாசம்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இம்முகா மில் 100 பேரிடம் கண்,  காது, மூக்கு, தொண்டை  பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது. 5 பேருக்கு புதிய அடை யாள அட்டையும், 5 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கவும் அளவீடு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா,  வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) முருகன், பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.