திருச்சிராப்பள்ளி, ஜூன் 18 - ஒன்றிய மோடி அரசு ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப் படையில் இளைஞர்களை பணியில் அமர்த்தக் கூடிய, அக்னிபாத் மசோதாவை கை விடக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் சனிக்கிழமை திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே தண்டால் எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செய லாளர் லெனின் தலைமை வகித்தார். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத் திற்கு அனுமதி இல்லை என தெரிவித்ததையடுத்து, வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட முயன்ற சங்க மாநில இணை செயலாளர் பால சந்திரபோஸ், மாவட்ட தலை வர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் கிச்சான், மாவட்ட நிர்வாகிகள் சேதுபதி, யுவ ராஜ் உள்ளிட்டோரை போலீ சார் கைது செய்தனர். மயிலாடுதுறை அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் அறிவழகன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத் தில், மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக அக்னிபாத் திட்டத்திற்கு எதி ராகவும், திட்டத்தை உடனடி யாக கைவிடக் கோரி யும் முழக்கங்களை எழுப்பிய வாறு நீதிமன்ற சாலையி லிருந்து கச்சேரி சாலை வழியே பேரணியாக வந்து கிட்டப்பா அங்காடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.