districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை கைவிடுக!

திருச்சிராப்பள்ளி, ஆக.30 - ஸ்மார்ட் மீட்டர் வைக்கும் திட்டத்திற்கான  டெண்டர் அறிவிப்பை கைவிட வலியுறுத்தி தென்னூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பல மாதங்களாக வழங்கப் படாமல் உள்ள இரட்டிப்பு ஊதியம், பயணப்  பட்டியல், பொது வருங்கால வைப்பு நிதி, முன்பண கடன் ஆகியவைகளை உடனே வழங்க வேண்டும். மின் இணைப்புகளுக்கு டோட்டெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் வைக்கும் திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்க உள்ளதை கைவிட வேண்டும். கேங்மேன் மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு 1.12. 2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.  1.12.2019-க்கு பிறகு 16.5.2019 முன் பணி யில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பலனை வழங்க வேண்டும். பிபி-2-வை ரத்து  செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெரு நகர் வட்டம் சார்பில் புதனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலா ளர் எஸ்.கே. செல்வராஜ், வட்ட பொருளாளர்  பழனியாண்டி, டிஎன்பிஇஓ மாநில துணை  பொதுச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர்  பேசினர்.