தஞ்சாவூர் தங்கும் விடுதியில் ஓட்டுநர் மர்மச் சாவு
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூரிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை காவல் துறையினர் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் கீழவாசல் பாலோபநந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன் (32). வாகன ஓட்டுநர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது இரு நண்பர்களுடன் கீழ் பாலம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு அறை எடுத்து தங்கினார். இவர்களில் குறளரசனும், ஒரு நண்பரும் மட்டும் ஒரு வாரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை வெகுநேர மாகியும் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்தது. தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினர் அறையைத் திறந்து பார்த்தபோது குறளரசன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து, குறளரசனின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிந்து குறளரசனின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து, அவருடன் தங்கியிருந்த நண்பரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குழு துவக்கம்
கும்பகோணம்,அக்.03 கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாண வர்களிடையே போதை பொருள் ஒழிப்புக் குழு உரு வாக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கும்ப கோணம் அரசினர் கலை கல்லூரியில் முதல்வர் அ. மாதவி தலைமையில் போதைப் பொருள் ஒழிப்புக் குழுக்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போதைப் பொருள் ஒழிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கி. சரவணன் வரவேற்றார். நிகழ்வில் மாணவ மாண வியர்களைக் கொண்ட இரண்டு போதைப் பொருள் ஒழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.. நிறைவாக நூலகர் ரா. சங்கலிங்கம் நன்றி கூறினார்.
ஆறுகள், நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களில் முழுகொள்ளளவு நீர் நிரம்பி செல்வதால் நீரின் வேகம் அதிகமாக உள்ளது. தூர்வாரப்பட்டு ஆழமாக உள்ளது என்பதால், குளிக்கவும் மற்றும் பிற காரணங்க ளுக்காக ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களுக்கு செல்பவர்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் குளிக்கவும், நீரில் மூழ்கும் ஆபத்துள்ள உள்ள இடங்க ளில் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் அபராதம் விதித்தனர். தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிக ளின்படி கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 164 கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், 102 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தா.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனையில் இளம்பெண் கர்ப்பப்பையில் 5 கிலோ கட்டி அகற்றம்
பெரம்பலுார்,அகுக்.3- பெரம்பலுாரில், இளம்பெண் வயிற்றில் இருந்த ஐந்து கிலோ கட்டியை பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.. பெரம்பலுார் மாவட்டம், அய்யலுார் கிராமத்தை சேர்ந்த வர் சரவணன் மனைவி செந்தமிழ்செல்வி(வயது 35) இவ ருக்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்ததுடன், அடிக்கடி வயிறு வீங்குதல் போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தன. இதற்கு அவ்வப்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை செந்தமிழ் செல்விக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து பெரம்பலுார் லட்சுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து பார்த்த டாக்டர்கள், செந்தமிழ் செல்விக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநரும், அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கரு ணாகரன், குழந்தை டாக்டர் ஜெயலட்சுமி, மயக்கவியல் டாக்டர் தினேஷ் மற்றும் நர்சுகள் ரம்யா, கிருஷ்ணதேவி, கோமதி ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினர் செந்தமிழ்செல்வி கர்ப்பப்பையில் இருந்த ஐந்து கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். செந்தமிழ்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ள அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என டாக்டர் கருணாகரன் தெரிவித்தார்.
சாலையின் குறுக்கே மாடு மீது மோதி பைக்கில் வந்தவர் பலி
தஞ்சாவூர், அக்.3 - தஞ்சாவூரில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள முறையூரைச் சேர்ந்தவர் கே. உபயதுல்லா (50). இவர் தஞ்சாவூரில் தங்கி பழக்கடையில் கூலி வேலை பார்த்து வந்தார். இவர் செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு வேலை முடித்த பிறகு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு மருத்து வக்கல்லூரி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ராஜப்பா நகர் முதன்மைச் சாலையில் சென்றபோது குறுக்கே மாடு வந்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மாட்டின் மீது மோதியதால், கீழே விழுந்த இவர் பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உபயதுல்லா புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.