திருச்சிராப்பள்ளி, பிப்.6,- பழைய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட, புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள யுபிஎஸ் திட்டத்தை கண்டித்தும், மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமான இந்த யுபிஎஸ் என்பது பென்சன் அல்ல பே அவுட். எனவே, இந்த பே அவுட் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ திருச்சி கோட்டம் சார்பில், வியாழனன்று மாலை திருச்சி ஜங்ஷனில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயூ கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், டி.ஆர்.இ.யூ. துணைப் பொதுச்செயலாளர்கள் சரவணன், ராஜா, கோட்ட உதவி தலைவர் பலராமன், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி கோட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.