திருச்சிராப்பள்ளி, டிச,13- தெற்கு ரயில்வே தொழிங்சங்க அங்கீகார தேர்தல் கடந்த டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் டி.ஆர்.இ.யூ. 38.34 சதவீத வாக்குகளை பெற்று தெற்கு ரயில்வேயில் அங்கீ கரிக்கப்பட்ட சங்கமாகி உள்ளது. இதையொட்டி அங்கீகார தேர்தல் வெற்றி விழா மற்றும் நன்றி அறி விப்பு கூட்டம் வெள்ளிக்கிழ மையன்று திருச்சி தலை மை தபால் நிலையம் அருகில் உள்ள ரயில்வே இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு டி.ஆர்.இ.யூ கோட்டத்தலைவர் சிவக் குமார் தலைமை வகித்தார் . துணை பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். கோட்ட செயலாளர்கள் கரிகாலன், வெங்கடேசன்,ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ கண்ணையன், ஏ.ஐ. ஆர்.சி.சி.ஏ குமரவேல், தேர்தல் பொறுப்பாளர்கள் வெங்கடேசன், சாம்பசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டி.ஆர். இ.யூ மண்டல உதவி தலைவர் பேபி ஷகிலா சிறப்புரை யாற்றினார். உதவி பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.