districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார மாநாடுகள்

குலசேகரம் வட்டாரச்  செயலாளராக த.சௌந்தர் தேர்வு

நாகர்கோவில், நவ. 3- கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் வட்டார சிபிஎம் ஆறாவது மாநாடு குலசேகரத்தில் நவ.3 ஞாயி றன்று நடைபெற்றது. சௌந்தர், ஸ்டாலின் பாபு, கிருஷ்ணவேணி தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொடியை பி. செல்லப்பன் ஏற்றினார். மாநிலக்குழு உறுப்பினர்  ஆர்.லீமாறோஸ் மாநாட் டைத் துவக்கி வைத்தார். வட்டார செயலாளர் பி. விஸ்வம்பரன், வட்டாரக் குழு உறுப்பினர் டி.சௌந்தர் அறிக்கைகள் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சேகர், என்.ரெஜீஷ் குமார் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் 15 பேர் கொண்ட புதிய வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக சௌந்தர் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் அரசு மானியம் வழங்கி ரப்பருக்கு உரிய  விலை நிர்ணயம் செய்ய வேண்டும், குலசேகரம் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம்  உயர்த்தி போதிய மருத்து வர்கள் நியமனம் செய்ய  வேண்டும், திற்பரப்பு பேரூ ராட்சி பகுதியில் விளை யாட்டு மைதானம் அமைக்கப் பட வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மெதுகும்மல் வட்டாரச் செயலாளராக கி.தங்கமணி தேர்வு

குழித்துறை, நவ.3-  கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது  மாநாடு வாவறை ஜான் ஹெரால்டு வில்சன் நினைவ ரங்கில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டுக்கு ராஜி, ஜெயன், வினிதா தலைமை வகித்தனர். கட்சியின் மூத்த நிர்வாகி எம். சேவியர் கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என். உஷா பாசி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். வட்டார  செயலர் கே. தங்கமணி அறிக்கை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி. விஜயமோகனன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலர் ஆர். செல்லசுவாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். 15 பேர் கொண்ட வட்டாரக் குழு தேர்வு செய்யப்பட்டது. வட்டாரச் செயலாளராக கி.  தங்கமணி தேர்வு செய்யப் பட்டார். ஆறுதேசம் அரசு  ஆரம்ப சுகாதார நிலை யத்தை முழுநேர மருத்துவ மனையாக தரம் உயர்த்தி 24  மணி நேரமும் செயல்பட வேண்டும், கோழிவிளை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தக்கலை வட்டாரச் செயலாளராக எம்.சுஜா ஜாஸ்பின் தேர்வு

நாகர்கோவில், நவ.2-  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டார சிபிஎம் பத்தாவது மாநாடு முளகுமூட்டில் நவ.3 ஞாயிறன்று நடைபெற்றது. சிவமோகன், மரிய மிக்கேல், ஜெனட் மேரி ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டுக் கொடியை வட்டாரக்குழு உறுப்பினர் சி.ஜாண் இம்மானுவேல் ஏற்றிவைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். வட்டாரக் குழு  செயலாளர் எம்.சுஜா ஜாஸ்பின், வட்டாரக் குழு உறுப்பினர் ஐ.லீலா அறிக்கைகள் தாக்கல் செய்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முகமது உசேன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் நிறைவுரை யாற்றினார். 15 பேர் கொண்ட புதிய  வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாள ராக எம்.சுஜா ஜாஸ்பின் தேர்வு செய்யப்பட்டார்.  களியக்காவிளை-கன்னி யாகுமரி தேசிய நெடுஞ்சா லையை செப்பனிடக் கோரு தல் உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாநாட்டையொட்டி முளகுமூட்டில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் பி.இந்திரா, கே.மாதவன், ஏ.ராஜன், ஜே. சைமன் சைலஸ் மற்றும் மாவட்ட வட்டார தலை வர்கள் பேசினர்.

ஓட்டப்பிடாரம் ஒன்றியச்  செயலாளராக த. சண்முகராஜ் தேர்வு

தூத்துக்குடி, நவ.3-  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 ஆவது மாநாடு புதியம்புத்தூரில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடி யினை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜகனி ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது பேசி னார். நடைபெற்ற பணிகள் மற்றும் ஸ்தாபன அறிக்கை குறித்து ஒன்றியச் செயலா ளர் சண்முகராஜ் அறிக்கை தாக்கல் செய்தார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.எஸ்.அர்ஜுனன் பேசினார். 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது. ஒன்றிய செயலாள ராக சண்முகராஜ் தேர்வு  செய்யப்பட்டார. புதியம் புத்தூரில் ஜவுளி தொழில் மேம்பட ரெடிமேட் சந்தை அமைத்திட வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் அரசு  கலை அறிவியல் கல்லூரி  துவங்கிட வேண்டும், புதியம் புத்தூர், மேலமடம், ஓட்டப் பிடாரம் முப்புலிவெட்டி, இந்திரா நகர் கிராமங்களில் இலவச வீட்டு மனை பட்டாதாரர்களுக்கு கலை ஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்டி தர வேண்டும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.