districts

img

கறம்பக்குடி மருத்துவமனைக்கு விரைவில் மருத்துவர்-செவிலியர் நியமனம்: அமைச்சர் உறுதி

சென்னை, அக்.11 - கறம்பக்குடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவ மனையில் நிரப்பப்படாத மருத்துவர் மற்றும் செவிலியர்  பணியிடங்களை நிரப்புவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று சட்டப் பேரவை யில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கந்தர்வகோட்டை தொகுதியில் உள்ள கறம்பக்குடி தாலுகா மருத்துவ மனைக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள், புற நோயாளிகள் பிரி வுக்கு வந்து செல்கின்றனர். இம்மருத் துவமனை தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டுகளை கடந்த பிறகும்கூட, மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப் படவில்லை. செவிலியர்கள் இல்லை.  அவசரப் பிரிவும் இல்லை. இதனால்  நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். எனவே, 24 மணி நேரமும்  இயங்கக்கூடிய அவசர பிரிவுடன் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் நியமனம் செய்ய அரசு முன்வருமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த  அமைச்சர் மா. சுப்பிரமணி யன், “எந்த ஒரு அரசு மருத் துவமனையும் தரம் உயர்த்தும் போது அதன் கட்டமைப்புகளை மேம் படுத்த வேண்டும். எந்த அளவுக்கு பணியாளர்கள் வேண்டும் என்பதை யும் அறிந்து அரசாணை வெளியிட வேண்டும். ஆனால், 8 ஆண்டு களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் 130 மருத்துவமனைகள் தரம் உயர்த்துவதற்கு அரசாணைகள் வெளி யிடப்பட்டது. அன்றைக்கு இருந்து ஆட்சியாளர்கள் பெயர் பலகையை மட்டும்தான் மாற்றினார்கள். கட்ட மைப்பை மேம்படுத்தவும், பணி நியம னத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதில் ஒன்றுதான் கறம்பக் குடி மருத்துவமனை.  இதுகுறித்து அந்த பகுதி கிராம  மக்கள் என்னிடம் புகார் தெரிவித்திருக் கிறார்கள். 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ள அந்த தவறை இந்த அரசும், முதலமைச்சர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு கூடாது என்று அமைச்சர் பதிலுக்கு அதி முக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரன் பேசினார். அப்போது, கடந்த கால  ஆட்சியில் கறம்பக்குடி மருத்துவ மனையில் ரூ. 2 கோடி செலவில் புதி தாக கட்டிடங்கள் கட்டப்பட்டு, திறந்து  வைக்கப்பட்டது. அங்கு மருத்துவர்கள் இல்லை என்று 25 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர்  மா.சுப்பிரமணியன், “ஒரு மருத்துவ மனையை தரம் உயர்த்தும் போது புதி தாக மருத்துவப் பணியிடங்கள் ஏற்படுத்த  வேண்டும். ஆனால், அதை எதையும் செய்யவில்லை” என்றார்.