திமுக பெண் கவுன்சிலர் கொலை: கணவன்-மனைவி கைது
கரூர், செப்.27 - கரூர் அருகே காட்டுப்பகுதியில் திமுக வைச் சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சி லர் கொலை செய்யப்பட்டு, அரை நிர்வா ணத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். இதில், சந்தேகத்தின் அடிப்படையில் கரூரைச் சேர்ந்த தம்பதியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத் தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கண வர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி திமுக வார்டு கவுன் சிலராக ரூபா இருந்தார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். திங்கள் கிழமை வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, வேலைக்காக கரூர் வந்த அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரூர் மாவட்டம், பவித்திரம் ஊராட்சிக் குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அரு கில் உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணத் துடன் ரூபா சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று ரூபாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சந்தேகத்தின் அடிப்படையில் கரூ ரைச் சேர்ந்த தம்பதியான கதிர்வேல் - நித்யா ஆகியோரிடம் புதன்கிழமை போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த ரூபாவும், கொடு முடியைச் சேர்ந்த நித்யாவும் கரூரில் வேலை செய்து வந்துள்ளனர். தினமும் இருவரும் வேலைக்கு அரசுப் பேருந்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், செப்.25 அன்று ரூபா வேலை செய்யும் வீட்டில் விசாரித்தபோது, அவர் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. மேலும், நித்யாவை பற்றி விசாரிக்க அவரும் வேலைக்குச் செல்லவில்லை என தெரிந் தது. இதனால் சந்தேகத்தின் பேரில், நித்யா மற்றும் அவரது கணவர் கதிர்வேலி டம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரூபா அணிந்திருந்த நகை களைப் பறிக்க ஆசைப்பட்டு, செப்.25 அன்று நித்யா, ரூபாவுக்கு போன் செய்து, பவித்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை இருப்பதாக கூறி வரவழைத்துள்ளனர். பின்பு, புன்னம் சத்திரத்தில் பேருந்தி லிருந்து இறங்கிய ரூபாவை, நித்யாவின் கணவர் கதிர்வேலின் இருசக்கர வாக னத்தில் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ரூபாவை கொலை செய்து, நகைகளை திருடி, தட யங்களை அழிக்க முயன்ற நித்யா, கதிர் வேல் ஆகிய இருவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர்.
சாலைப் பணிகள் துவக்கம்
தஞ்சாவூர், செப்.27 - முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.57.12 லட்சம் மதிப் பீட்டில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றி யம், வீரியங்கோட்டை ஊராட்சி, அம்மன்கோ வில் தெரு - சொரியன் தெருவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதேபோல், மருங்கப் பள்ளம் ஊராட்சி, மருங்கப்பள்ளம் வாழாப் பாறை குடியிருப்பு சாலை ரூ.35.48 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படு கிறது. இந்த இரு பணி களையும் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொ டங்கி வைத்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
பாபநாசம், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரோட் டரி சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யம் பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க ஆலோசகர் காதர் பாட்சா வரவேற்றார். வருங்கால ஆளுநர் பாஸ்கர், அரசு உதவிபெறும், தனியார் பள்ளியைச் சேர்ந்த 38 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றி னார். இதில் சங்க உறுப்பி னர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்ற னர். செயலர் முகமது ரஹ்மத்துல்லா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் களுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டன.
அடிக்கல் நாட்டு விழா
பாபநாசம், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியில் பாப நாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தாமரைச் செல்வன், ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலை வர் விஜய் பிரசாத், பாப நாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பி.டி.ஓ சிவக் குமார், பணி மேற்பார் வையாளர் செல்வராணி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு
நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
பெரம்பலூர், செப்.27 - பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் கொள்ளை, வழிப்பறியால் பெண்கள், வயதா னவர்கள் அச்சமடைந்துள்ளனர். உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. பெரம்பலூர் கல்யாண் நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விஜயா(65). இவர் புத னன்று காலை வீட்டின் அருகே உள்ள கார் ஷெட்டின் கதவை மூடிக் கொண் டிருந்த போது, பைக்கில் வந்த கொள்ளையர்கள் விஜயா அணிந் திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்களின் கையில் 7 பவுன் தாலிக்கொடி சென்றுவிட்டது. 3 பவுன் தங்க செயினை விஜயா பிடித்துக் கொண்டதால், அது தப்பியது. பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதேபோல் செப்.25 அன்று பெரம் பலூர் நான்கு ரோடு பகுதியில் காலை 9 மணியளவில் காய்கறி வாங்கிச் சென்ற பெண்ணிடம் 11 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செப்.20 அன்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி கோயில் உண்டியலி லிருந்து பணம் கொள்ளையடிக்கப் பட்டது. நான்கு ரோடு பெட்ரோல் பங்கு அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ராஜீவ் என்ப வரது வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கை.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ ரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. கொள்ளை மற்றும் வழிப்பறி கூடாரமாக மாறி வரும் பெரம்ப லூர் மாவட்டத்தில் பெண்கள் அச்சத் துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளைகள் இன்னும் அடை யாளம் காணப்படாத நிலையில் வெளிமாவட்ட திருடர்கள் அதிக ளவில் பெரம்பலூரில் முகாமிட்டுள்ள னரா என்ற சந்தேகம் பொதுமக்க ளுக்கு எழுந்துள்ளது. பெரம்பலூர் காவல் நிலையத் தில் அதிகமான பணிச்சுமையும், போதுமான காவலர்களும், காவல் அதிகாரிகளும் இல்லாததும் ஒரு காரணம். எனவே, அரசு உடனடியாக பெரம்பலூர் காவல் நிலையத்தை பிரிப்பதோடு, கூடுதல் காவ லர்களை பணி நியமனம் செய்து சட்டம் ஒழுங்கையும், திருட்டு சம்ப வங்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத் திற்கு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கொண்டு சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கோரிக்கை வைத்துள்ளது.
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், செப்.27 - திருவாரூர் மாவட்ட விவ சாயிகளின் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 29 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 முதல் 1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட ஆட்சி யரக கூட்டரங்கில் நடைபெற வுள்ளது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட் டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள், விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரி வித்துள்ளார்.
கரூர்: சிபிஎம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
கரூர், செப்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் செப்.28 அன்று மாலை கரூர் உழவர் சந்தையில் நிதியளிப்பு - அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பொதுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் எனவும் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.
இயற்கை வேளாண் பயிற்சி
பொன்னமராவதி, செப்.27 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய இயற்கை வேளாண் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண் துணை இயக்குநர் ஆதிசாமி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அங்கக வேளாண்மையின் முக்கியத்து வம், நோய் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கிப் பேசினார். பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் ரஹ்மத் நிஷா பேகம், பாரம் பரிய வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் இயற்கை வேளாண்மை முன்னோடி விவ சாயி சிவராமன், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து எடுத்து ரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் திரவ வடிவ நுண்ணுயிர் உரங்கள் குறித்து எடுத்து கூறினார்.
ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
அரியலூர், செப்.27 - அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணி புரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 28 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்.28, 29, 30 ஆகிய தேதி களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படு கிறது. இதற்கான தேர்வு அக்டோபர் 6, 7 தேதிகளில் நடை பெறுகிறது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்க ளில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடை யாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும். இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். உடல் தகுதிகள் காவல்துறையைப் போன்றது. இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாள்களுக்கு உரிய படித்தொகை மட்டுமே பெற்று தரப்படும். பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு மூன்று ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். அரசுப் பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகி யோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.
உலக சுற்றுலா தின விழா
மயிலாடுதுறை, செப்.27 - மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினத்தை செப்.27 அன்று கொண்டாடி வருகிறது. இந்நிலையில் புதனன்று “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்” என்ற கருப்பொருளில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவையொட்டி, பூம்புகார் கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் சிவசக்திவேல் பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினர்.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூர், செப்.27 - அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், மணக்கால், விளந்தை, ஜெயங் கொண்டம், த.கீழவெளி, இளையபெருமாள் நல்லூர், வடவீக்கம், வெத்தியார்வெட்டு, பாப்பாகுடி, கங்கை கொண்டசோழபுரம், கொல்லாபுரம், இளந்தைக்கூடம், தூத்தூர், கீழகொளத்தூர், பூவாணிப்பட்டு ஆகிய ஊர்களின் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கும், இளைக் கடம்பூர், ஜெயங்கொண்டம், வடவீக்கம் பள்ளிகளில் காலி யாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கும் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நிரப்பப்பட வுள்ள இந்த தற்காலிகப் பணியிடத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்த வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இடை நிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக் கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை அரியலூர் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடி யாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 29.9.2023 அன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
சம்பள பாக்கியை வழங்க சிபிஎம் கோரிக்கை
தஞ்சாவூர், செப்.27 - நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “பின்னவாசல் ஊராட்சி, சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். சித்தாதிக்காடு பகுதியில் ஒளிராத தெரு விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும். பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் உள்ள நான்கு ரோட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.