districts

img

தீபாவளி போனஸ் குறைப்பு திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க அங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம், அக்.22 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே திருபுவனம் நெச வாளர்கள் பட்டு கூட்டுறவு சங்கம் தமிழகத்தில் புகழ்பெற்றவை. இங்கு  1800-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்த ஆண்டு 2024-25 வரவு -செலவு 43 கோடி ரூபாயில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் நெசவாளர்களான அங்கத்தினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு 38 சதவீதம் வழங்கப் பட்டு வந்தது. ஆனால் இந்தாண்டு 10.2 சதவீதம்தான் வழங்கப்படும் என வும், அங்கத்தினருக்கு வழங்கக் கூடிய ஈவுத்தொகை (டிவிடெண்ட்) கடந்த ஆண்டைவிட குறைவாக 8  சதவீதம்தான் வழங்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்களன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கத்தினர்களான திகோ சில்க்ஸ் பாதுகாப்பு குழு வினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.  இந்நிலையில் செவ்வாயன்று திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க  அலுவலகத்தில் பாதுகாப்பு குழு வினர் மற்றும் அங்கத்தினர்கள் ஏராள மானோர் இந்தாண்டு 10.2 சதவீதம் என குறைத்து தீபாவளி போனஸ் அறிவித்ததை கண்டித்தும், போனசை  அதிகம் வழங்கக் கோரியும், எப்போ தும் போல் டிவிடெண்ட் 14 சதவீதம் வழங்கக் கோரியும், தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திகோ சில்க்ஸ் நெசவா ளர்களுக்கு, நியாயமான தீபாவளி  பண்டிகை போனசையும் ஈவுத் தொ கையையும் தமிழக அரசு முழுமை யாக வழங்க வேண்டும் என நெச வாளர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு விரைவில் நெசவாளர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக் காவிட்டால், குடும்பத்துடன் காத்தி ருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.  போராட்டத்தில் திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கௌரவத் தலைவர் சா. ஜீவபாரதி, தலைவர் உதயகுமார், செயலாளர் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.