புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட காவல் இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.