districts

img

தென்காசியில் கல்விகடன் முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி, ஆக , 4 தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி யின் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது. இந்த மாதத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு கல்வி  கடன் முகாமில் தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள் மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும்  வெளி நாடுகளில் தற்போது படித்து கொண்டு இருக்கும்  மாணவ மாணவியரும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி கல்வி கடன்  பெற்றுக்கொள்ளலாம். மேலும் தற்போது கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் கல்விகடன் தேவை எனில் கடந்த கல்வி ஆண்டிற்கான மதிப்பெண் சான்று டன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.  வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ. 4 இலட்சம் வரை மாணவ,மாணவியர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி பத்திரம் பிணை தேவையில்லை. ஆனால்  மூன்றாம் நபர் உத்திரவாதம் அவசியம். நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் (மேனேஜ்மேண்ட் கோட்டா, கல்லூரி கவுன்சி லிங்கில் கலந்து கொள்ளாதவர்கள்) சேரும் அனைத்து  மாணவ மாணவியர்களுக்கு கட்டாயம் சொத்து பிணை  அவசியம். இம்முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப் பங்கள் பெற்று தகுதியான மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் வழங்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் அனைத்து கல்லூரி சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.