புதுக்கோட்டை, மே 19-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடியில் வறட்சி நிவாரணம் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றி யப் பகுதிகளில் கடந்த சில மாதங்க ளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் நெற்பயிர் கள் அதிகளவு சேதமடைந்தன. இது குறித்து வேளாண் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக் கையும் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுநாள் வரை விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டக் குழு உறுப்பினர் கரு.ராம நாதன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி, துணைத் தலைவர் சி.சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் கேவிஎஸ்.ஜெயராமன், செய லர் என்.செல்லதுரை உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சி யர் சிவகுமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விவசாயி களின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொ டர்ந்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.