கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் பாலக்கரை பகுதி குழு, மாதர் சங்கம் மற்றும் பாலர் சங்கம் பாரதி நகர் கிளை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வெற்றி செல்வன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாதர் சங்க பொருளாளர் ராஹிலா, பகுதி செயலாளர் சோலை ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.