districts

img

மாநில தடகளப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

கரூர், செப்.20 - மாநில தடகளப் போட்டியில் பங்கேற்கும்  வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கி  வழியனுப்பும் விழா கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தடகளச் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிக்கு வீரர், வீராங்க னைகள் தேர்வு, கடந்த செப்.1, 2 ஆம்  தேதிகளில் புலியூர் விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது. இதில் தேர்வு பெற்ற  வீரர், வீராங்கனைகள் ஈரோடு மாவட்டம்,  வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில்  வியாழக்கிழமை முதல் நான்கு நாட்கள்  நடைபெறும் மாநில அளவிலான விளை யாட்டு போட்டியில் பங்கேற்கிறார்கள்.  இந்த வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை  வழங்கி வாழ்த்தி வழியனுப்பும் விழா நடை பெற்றது. கரூர் மாவட்ட தடகளச் சங்க  செயலாளரும், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணை தலைவருமான என். பெருமாள் தலைமை வகித்தார். கரூர்  மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலா ளர் சேதுராமன் வரவேற்றார். முன்னாள்  ஜிம்னாஸ்டிக் வீரரும், தொழில் அதிபருமான செல்வம் வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை  வழங்கி வாழ்த்திப் பேசினார்.  உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து  கொண்டனர்.