districts

img

புதுக்கோட்டையில் சிஐடியு செய்தி இதழுக்கு ஆயிரம் சந்தாக்கள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜன.29 - இந்திய தொழிற்சங்க மையம் நடத்து கிற சிஐடியு செய்தி இதழுக்கு புதுக்கோட்டை  மாவட்டத்திலிருந்து ஆயிரம் சந்தாக்கள்  மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனி டம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில பொதுச்  செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றி னார். அவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட சிஐடியு செய்தி  இதழுக்கான ஆயிரம் சந்தா தொகை ரூ.1,60,000 வழங்கப்பட்டது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலச் செயலாளர் எம்.ஐடாஹெலன், மாவட்டக் குழு முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். முன்னதாக ஏ.முகமதுகனி வர வேற்க, மாவட்டப் பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன் நன்றி கூறினார். பேரவையில் மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 300- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.