districts

img

ரோட்டரி சங்க விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 1- பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகி கள் பணி ஏற்பு விழாவில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் எம்.எஸ். விழா அரங்கில், ரோட்டரி சங்க  புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. 2024-25 ஆம்  ஆண்டிற்கான புதிய தலைவராக மருத்து வர் ஏ.ரவிச்சந்திரன், செயலாளர் ஆர்.செந்தில் குமார், பொருளாளராக டி.வீரராகவன் மற்றும்  சங்க பொறுப்பாளர்கள் பணியேற்றனர்.  சிறப்பு விருந்தினராக முன் னாள் மாவட்ட ஆளுநர் பி.எஸ். ரமேஷ்பாபு பங்கேற்று சிறப்புரை  ஆற்றினார். உதவி ஆளுநர் பி. சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில், 6 ஏழைக்  குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள்,  அறந்தாங்கி வள்ளலார் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், ஐந்து பெண்களுக்கு ஆடைகள்,  பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு  கல்வி உதவித்தொகை என ரூ.50 ஆயிரம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. உயர்கல்வி முடித்த இரு மாணவி களின் தாயாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்வில் சங்க இயக்குநர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;