மயிலாடுதுறை, மார்ச் 3- தமிழக அரசின் தீவிர பல்ஸ் போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் ஞாயிறன்று (மார்ச் 3) போலி யோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயி றன்று முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் நகராட்சி வளாகத்தில் போலியா சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார். புதுக்கோட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி முகாமினைத் தொடங்கி வைத் தார். எம்.சின்னதுரை எம்எல்ஏ கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கந்தர்வ கோட்டை பேருந்து நிலையத்திலும், கிள்ளுக் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகா மினை, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் துவக்கி வைத்தனர். பாபநாசம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை நாடா ளுமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தொடங்கி வைத்தார். மெலட்டூர் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் நடந்த முகாமை அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் தொடங்கி வைத்தார். கபிஸ் தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் எம்.பி.க்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா உட்பட பலர் பங்கேற்றனர். அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, பட்டுக்குடி, புத்தூர், குடிகாடு, நாயக்கர் பேட்டை உள்ளிட்ட கிரா மங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்ற னர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன் ஆகியோர் 5 வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தனர். கரூர் கரூர் மாவட்ட பேருந்து நிலையத்தில், மேயர் வெ.கவிதா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகா மினை துவக்கி வைத்தார். கரூரில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.