districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மயிலாடுதுறை, டிச.26 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டிஇஎல்சி புதிய எருசலேம் ஆலயத்தில் தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மைப் பணி யாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு  வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புதிய எருசலேம் ஆயர் மறைதிரு சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார். சபைகுரு, கத்தோலிக்க திருச்சபையின் தரங்கை பங்கு தந்தை  அருளானந்தம் அருட்சகோதரி மெர்சி தங்கம்,  தரங்கம்பாடி தூய தெரசா பெண்கள்  கல்லூரி செயலாளர் கருணா ஜோசபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ டர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு கேக், போர்வை, வேட்டி, புடவை, கோரைப்  பாய் ஆகிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.  இதில் பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜான்சன் ஜெயக்குமார், தரங்கம்பாடி பேரூராட்சி துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர்.