தீக்கதிர் நாளிதழின் தீவிர சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில், 907 சந்தாக்களுக்கான தொகை ரூ.16 லட்சத்து 75 ஆயிரத்து 300ஐ மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், செய்தி ஆசிரியர் ஏ.ஆர்.பாபு மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.