மயிலாடுதுறை, ஜன.04- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை கிராமத்தில் புவி காப்பு அறக் கட்டளை மற்றும் நல்லாடை டாக்டர் ராமதாஸ் சகோதரர் கள் சமூக நல அறக்கட்டளை இணைந்து 10 ஆயிரம் மரக் கன்றுகள் வழங்கு விழா நல்லாடையில் நடைபெற்றது. விழாவிற்கு புவிகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பா ளர் இரணியன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. அருள்செல்வன் வரவேற்று பேசினார். நல்லாடை அறக்கட்டளை பொருளாளர் ஏ.ஆர், மதிவாணன், செயலாளர் ஏ.ஆர்.சி. ராமு, உறுப்பினர் செந்தில்நாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து சிசெல்ஸ் நாட்டின் தொழில் அதிபர் வை.கருணாநிதி 10, ஆயிரம் பேருக்கு வேங்கை, மகாகனி, சந்தானம், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகை யான மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற் பட்டோருக்கு உணவு வழங்கினர். விழாவில் புவிகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், நல்லாடை ஊராட்சி மன்ற தலைவர் காவிரி ஜெயச் சந்திரன் துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதி சிவகுமார், மற்றும் நல்லாடை ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.