அருமனை, மே .26-
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தென்னை விவசாயி கள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடை பெற்றது.
தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள பல்வகை நோய்களை போக்க வேண்டும், தென்னை மரம் ஏற நவீன கருவிகளை மானிய விலையில் வழங்க வேண்டும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க அரசு கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநி யோகம் செய்ய வேண்டும், மானிய விலையில் தென் னங்கன்றுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு தென்னை விவசாய சங்க மாவட்ட செயலர் டி. வின்சென்ட் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட தலைவர் என். முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்புறம் வட்டார செயலர் ஆர். ஜெயராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
அமைப்பின் மேல்புறம் வட்டார தலைவர் என். விஜயேந்திரன், வட்டார செயலர் ஜி. ஹென்றி, வட்டார பொரு ளாளர் பி. வினோத், மாவட்ட குழு உறுப்பினர் கே. தங்கப்பன், அமைப்பின் நிர்வாகி சதீஷ், சந்திர பிரசாத், அன்கோடு கூட்டுறவு சங்க தலைவர் அனூப் கிறிஸ்துதாஸ், கிறிஸ்டோபர், தோமாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்டார வேளாண்மை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டதுடன், அப்பகுதியில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.