திருச்சிராப்பள்ளி, ஏப்.4 - 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். 20 ஆண்டு காலமாக சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தரைக்கடைகள் நடத்திவரும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள், கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூலம் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். வெண்டர் கமிட்டி அமைக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யாமல் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்ட செய லாளர் செல்வி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசி னார். பின்னர் மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணையர் அக்பர்அலி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மாநகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்ட வியாபாரிகளின் கடை கள் அகற்றப்படாது. அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்த வர்களின் விண்ணப்பங்கள் உரிய ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். வெண்டர் கமிட்டி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் கிழக்கு தாசில்தார் கலை வாணி, சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.