districts

img

வானராங்குடியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர், நவ.1-  பூதலூர் அருகே வானராங்குடியில், சோழர் கால துண்டுக் கல்வெட்டுக் கண்டெடுக் கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத் தைச் சேர்ந்த வானராங்குடியில் அமைந்துள்ள  நாகாம்பிகை உடனுறை நாகநாதசுவாமி கோயிலில் கல்வெட்டு இருப்பதாக, வானராங் குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கோ. ராஜ்குமார் தகவல் அளித்தார். அதனடிப்படையில், அவ்வூரைச் சேர்ந்த அ.முருகேசன், உதயகுமார், பி.எழிலரசன், சி.சிவக்குமார் ஆகியோர் உதவியுடன் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் கோ.தில்லை கோவிந்தராஜன், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ் முதுகலை இரண்டாம் ஆண்டு மாண வர்கள் க.பார்த்திபன், வீ. செல்லையா, ர.பிரசாந்த் ஆகி யோர் அடங்கிய குழுவினர், இக்கோயிலின் ராஜகோபுர நுழைவாயிலின் இடப்புறச் சுவற்றில் கல்வெட்டைக் கண்ட றிந்து, அதனை படி எடுத்து ஆய்வு செய்தனர்.   இதுகுறித்துச் சோ.கண்ணதாசன், கோ. தில்லை கோவிந்தராசன் ஆகியோர் கூறுகை யில், “இந்தக் கல்வெட்டு 11 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த சோழர் கால துண்டுக் கல்வெட்டு  என்பது தெரிய வந்தது. இந்தக் கல்வெட்டில்  மெய்க்கீர்த்தியோ, மன்னனது ஆட்சி ஆண்டோ காணப் பெறவில்லை. இக்கல் வெட்டு வரிகளின் கடைசியில், சில எழுத்து கள் சிதைந்த நிலையில், நிலம் தானச் செய்தி இடம்பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருக்க வேண்டிய ஸ்வஸ்திஸ்ரீ எனும் மங்கலச் சொல் இடம் பெற்றிருக்கிறது” என்றனர்.