districts

img

மக்கள் குறை தீர் கூட்டங்களில் பொது நிவாரண நிதி வழங்கல்

தஞ்சாவூர், ஜன.6-  தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500 மனுக்களை பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  மேலும், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 3 நபர்கள் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம், தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், தினசரி நாளிதழில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி ரூ.2,25,000 க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர். மு. பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், ஆவின் பொதுமேலாளர் சரவணகுமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.