districts

img

மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்!

தஞ்சாவூர், நவ.20-  மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.  கடும் ஊனமுற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு, அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரத்தை, நான்கு சக்கர  வாகனம் என காரணம்  காட்டி உரிமைத்தொகை வழங்க  மறுப்பதைக் கைவிட்டு, மறுக்கப்பட்ட  மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக் கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் திங்கட் கிழமை மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் கே.மோகன், மாவட்ட துணைச்  செயலாளர்கள் சி.ராஜன், ஏ.சாமியப்பன்,  கோவி.ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் பி.சங்கிலிமுத்து, தஞ்சை மாநகரத் தலைவர் கே.குமார், ஒன்றியத் தலை வர்கள் எம்.தங்கப்பன் (ஒரத்தநாடு), சிவக்குமார் (திருவோணம்) உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியாவை சந்தித்து கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிக்கப்பட் டது. 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ் முன் னிலை வகித்தனர்.  மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா, பட்டுக்கோட்டை பொறுப்பா ளர் மணிகண்டன், மதுக்கூர் பொருளா ளர் புஷ்பலதா, சேதுபாவாசத்திரம் பொருளாளர் நாகராஜன், பேராவூரணி  பொருளாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து,  வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலியி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை  மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். சீர்காழியில் மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இரு இடங்களி லும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராள மான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். சீர்காழியில் போராட்டக் களத்திற்கு  நேரில் வந்த கோட்டாட்சியர் கோரிக்கை  மனுவை பெற்றுக் கொண்டார்.