கரூர், ஜூன் 14 - கரூர் மாவட்ட வருமான வரித்துறை சார்பாக, மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரித் துறை துணை ஆணையர் கே.ஆர்.கருப்ப சாமி பாண்டியன் தலைமை வகித்து பேசுகை யில், “கடந்த ஆண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம் 18 சத வீதம். ஆனால் கடந்த ஆண்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல் 0.98 சதவீதம் மட்டுமே. இது மிகவும் குறை வாக உள்ளது. எனவே வரி செலுத்துவோர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உரிய வரியினை செலுத்த முன் வரவேண்டும். ADVANCE TAX எனப்படும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்ட வேண்டும். முதல் தவணை ஜூன் 15 ஆம் தேதிக்குள்ளும், மீத முள்ள தவணைகளை முறையே செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிக் குள் கட்ட வேண்டும். முன்கூட்டியே செலுத்தப் படும் வரியினை தாமதமாக செலுத்த நேரிட் டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரி டும். எனவே இந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதிக் குள் முதல் தவணை 15 சதவீதத்தை கட்டா யம் செலுத்த வேண்டும். திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தர கணக்கு எண்கள் 30.74 லட்சம். இதில் 3.09 லட்சம் நபர்கள் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றனர். இது 10 சதவீதம் மட்டுமே. அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபார்க்கப் படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படி வங்கள் வரி செலுத்துவோர் மீதுள்ள நம்பிக் கையில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படு கிறது. எனவே வரி செலுத்துவோர் இதனை கவனத்தில் கொண்டு படிவங்களை அதிக அளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராதத் தொகை செலுத்த நேரிடும்” என்றார். வருமான வரி அதிகாரி ஆர்.முத்து கிருஷ்ணன் காணொலி (ppt) மூலம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ள சேவைகள் மற்றும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய தகவல்களை விளக்கிக் கூறினார்.