districts

img

பதியம் போடுதல்; செயல் விளக்கம்

திருச்சிராப்பள்ளி, செப்.5- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்க லைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியில் இளங்கலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் திருச்சி லால்குடி வட்டாரம் சிறுமயங்குடி ஊராட்சியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இதனொரு பகுதியாக, சிறுமயங்குடி ஊராட்சியில் செல்லப்பாவின் கொய்யா தோட்டத்தில், பதியம் போடுதல் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.  6 ஆண்டுகளான கொய்யா செடியில் விண் பதியம் செய்யலாம், பென்சில் அளவுள்ள தண்டுகளை தேர்வு செய்து அவற்றின் மேல் பட்டை 3 செ.மீ நீளத்திற்கு வெட்டி எடுத்து விட வேண்டும். பின்னர் நன்கு வேக வைத்து ஆற வைத்த தென்னை நார் கழிவு வைத்து பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி விடவேண்டும். காயம்பட்ட பகுதியில் வேர்கள் தோன்றும் பின்னர் செடியிருந்து பிரித்து எடுத்து நட்டு பராமரிக்கலாம் என்று மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.