districts

img

பணிநிரந்தரம் செய்திடக்கோரி மின் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா

மயிலாடுதுறை ,ஆக-21-   மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணிநிரத்தரம் செய்திடக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)சார்பில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் திட்டத்தலைவர்  வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்  ஜி.ஸ்டாலின் மற்றும் அமைப்பின் நிர்வாகி கள் உரையாற்றினர்.