திருவாரூர், அக்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் நகரத்தின் 24 ஆவது நகர மாநாடு சிபிஎம் கட்சி அலுவ லகத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் திங்கள்கிழமை நடை பெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் வி.ராஜாங்கம் ஏற்றினார். டி.ஏ. சரவணன், ஆர்.சுந்தரி ஆகியோர் தலைமை வகித்தனார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம் துவக்க உரையாற்றினார். நகரக்குழு உறுப்பினர் டி.ஜி.சேகர் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அகில இந்திய பொதுச் செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்தை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மூத்த தோழர் வி.பழனிவேல், டி. அய்யாறு ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம், பாரதி நூலகத்தை திறந்து வைத்தார், மாநாட்டில் 9 பேர் கொண்ட நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நகரச் செயலாளராக மீண்டும் டி.ஜி.சேகர் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார். குடவாசலில் சுகாதர சீர்கேட்டுடன் செயல்படும் இறைச்சி மார்க்கெட் சீர் செய்தும், ஆட்டிற்கு சுகாதர முத்திரை பதித்து ஆட்டை அறுக்கும் முறை நடை முறைப்படுத்தவேண்டும்; குடவாசல் பேருந்து நிலையத்தில் காலை மாலை காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.