கரூர், ஆக.11 - கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தேவர்மலை, மேலப்பகுதி மற்றும் தரகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ரூ.78.63 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்ட பணி, களத்துப்பட்டியில் கமலம் என்பவரின் விளைநிலத்தில், ரூ.1.54 லட்சம் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைக்கப்பட்ட பணி ஆகியவற்றை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வெரி யம்பட்டியில் மூக்கன் என்ற பயனாளி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அவரது வீட்டுப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு, கட்டு மானப் பணியின் போது உடனிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோ சனை வழங்கினார். மேலப்பகுதி ஊராட்சி கருச்சிப்பட்டி யில், ரூ.7.99 லட்சம் மதிப்பீட்டில் பொது மயானம் கட்டப்பட்டு வரும் பணி, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப் பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் பணி தன்மை என மொத்தம் ரூ.78.63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். முடிவுற்ற பணிகளை தவிர, நடை பெற்று வரும் பணிகளை தரமாகவும் விரைவாகவும் கட்டி முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பொறியா ளர்களுக்கு ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.