பாபநாசம், ஏப்.22 - மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களின் ஓய்வு வயதை 50 என்று நிர்ணயித்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் பாபநாசம் கிளை சார்பில் பாபநாசம் திருப்பாலைத்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியத்தை மாதம் ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களின் ஓய்வு வயதை 50 என்று நிர்ணயித்திட வேண்டும். பேறு காலத்தில் 6 மாத சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பி.எப் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வாரியப் பதிவிற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று கோருவதை கைவிட வேண்டும். நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த ஒரு வார காலத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். சிமெண்ட், கம்பி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் திருப்பாலைத் துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் பாபநாசம் கிளை சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலர் சுகுமாறன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.