திருச்சிராப்பள்ளி, ஜூலை 20-
திருச்சி பொன்மலை ரயில்வே பிடபுள்யூ டெப்போ வில் சுமைப்பணி தொழிலா ளர்கள் ஐந்தாண்டுகளுக் கும் வேலை செய்து வரு கின்றனர். ரயில்வே இரும்புப் பொருட்களை லோடிங் மற் றும் அன்லோடிங் செய்வ தற்கு ஒரு டன்னிற்கு ரூ.300 கூலியாகப் பெற்று வந்த னர். இந்நிலையில் தற்போது ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் இதுவரை நேரில் வராததால் சுமைப்பணி தொழிலாளர் கள் வேலை, கூலியை இழக் கும் நிலை உள்ளது.
இந்தப் பிரச்சனையில் ரயில்வே தெற்கு கோட்ட மேலா ளர் தலையிட்டு பொன் மலை ரயில்வே பிடபுள்யூ டெப்போ தொழிலாளர்களுக்கு மீண டும் வேலை வழங்க வேண் டும். நியாயமான கூலி வழங்க நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு திருச்சி ராப்பள்ளி மாவட்ட சுமைப் பணித் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழனன்று ரயில்வே ஜங்ஷனில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிஐ டியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாவட் டத் துணைச் செயலாளர் ரமேஷ், மாநகராட்சித் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் மணிமாறன், மாவட் டத் தலைவர் இளையராஜா, சுமைப்பணி சங்க மாநிலக் குழு உறுப்பினர் மூர்த்தி உட்பட ஏராளமான சுமைப் பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.