districts

img

நெசவுத்தொழிலை பாதுகாத்திட கோரி ஆர்ப்பாட்டம்

பட்டு கைத்தறி நெசவுத்தொழில் கடும் நெருக்கடி மற்றும் நெசவு தொழிலை பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசைகளை வலியுறுத்தி (ஜூலை.30) செவ்வாயன்று  காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் கைத்தறி துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.லட்சுமிபதி தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.ஜீவா, ஜி.வசந்தா, எஸ்.பழனி ஜி.எஸ்.வெங்கடேசன், எம்.வெங்கடேசன், சந்திரன், மாணிக்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், சங்க நிர்வாகிகள் எம்.சுப்பிரமணி, ஆர்.கே.சந்திரன், வி.சிவப்பிரகாசம், கே.சங்கர், ஆர்.பிரபாகரன், டி.துளசிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.