வேதாரண்யம், அக்.5- நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறை அடுத் துள்ள உம்பளச்சேரி கிழக்கு ஊராட்சியில் வசிக்கும் மக் கள் இங்குள்ள கருப்புக் குளம் தண்ணீரை குடிநீர் பயன்பாட்டிற்குப் பயன் படுத்தி வந்தனர். கடந்த 35 ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் குளம் பாழடைந்து துர்நாற்றம் வீசியதால் குடி நீரைப் பயன்படுத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வா கம்- வட்டார வளர்ச்சி அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. குளத்தை தூர்வா ரக் கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.