திருச்சிராப்பள்ளி, ஆக.23 - கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சிறுமி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொல்கத்தாவில் பெண் மருத்துவப் பயிற்சியாளரை பாலியல் வன்கொலை செய்ததை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு திருச்சி மாவட்ட அமைப்பாளர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர் சங்கம் வள்ளி, சாலை போக்குவரத்து சங்க சந்திரன், ஆட்டோ சங்கம் சார்லஸ், தரைக்கடை சங்கம் கணேசன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இறுதியாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.