districts

img

சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர், ஆக.29 - தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெண்டிங் கமிட்டி தேர்த லை நடத்த வேண்டும் என வலி யுறுத்தி, தஞ்சை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், மாநிலம் தழுவிய கோரிக்கை விளக்க ஆர்ப் பாட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மணி மாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கையை விளக்கிப் பேசி னார். இதில், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர்  பிரபு, சங்க நிர்வாகிகள்  பாண்டியன், சார்லஸ், திலகவதி, தங்கையன், அப்துல் காதர், காஞ்சனா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  மாநிலம் முழுவதும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த வேண்டும். வெண் டிங் கமிட்டி தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த கடன் உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை சட்டத்திற்கு விரோ தமாக அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.. இதுவரை தேசிய அடையாள அட்டை வழங்கப்படாத வியாபாரிகளுக்கு மாநகராட்சியே அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.  சி.ஜெயபால்  பின்னர் செய்தியாளர்களிடம் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் கூறியதாவது, “தஞ்சாவூர் மாநகராட்சி எவ்வித முன்னறி விப்பின்றியும், தொழிற்சங்கங்க ளுக்கு தகவல் தெரிவிக்காமலும், நாளை (ஆக.30 வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர் மாநகராட்சி வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த உள்ளது. இதனை ஒத்திவைத்து, முறையாக அறிவிப்பு செய்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இல்லை என்றால் மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.