26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியூசி சுரேஷ், எச்எம்எஸ் ஜான்சன், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், ஏஐசிசிடியு ஞான தேசிகன், எல்எல்எப் தெய்வீகன், எஸ்கேஎம் அயிலை சிவசூரியன், பிஎஸ்என்எல் சுந்தர்ராஜன், வங்கி ராமராஜ், தொமுச மாவட்டத் தலைவர் குணசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட மாதர், மாணவர், வாலிபர் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.