districts

img

உ.பி., மின் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.10-  பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து உத்தரப்பிரதேசம், சண்டிகரில் போராடும் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் செவ்வாய் அன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.

 ஆர்ப்பாட்டத்தை விளக்கி, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், நிர்வாகி ஆலயமணி, தமிழ்நாடு எம்ப்ளாயிஸ் ஃபெடரேஷன், மாவட்டச் செயலாளர் சிவச்செல்வன், தமிழ்நாடு மின்வாரிய இன்ஜினியர் சங்க மாவட்டசி செயலாளர் நரசிம்மன், டிஎன்பி இஓ மாநில துணைப் பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷன் வட்டத் தலைவர் பெருமாள், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டத் தலைவர் நடராஜன் ஆகியோர் பேசினர்.

இதில், அனைத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.