districts

img

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 9-  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சங்கத்தின் சார்பில்  டெல்டா மாவட்டங்களில் ஆயிரம்  மையங்களில் உணவு இடை வேளையின் போது கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத் தப்பட்டன.  இதனொரு பகுதியாக மயி லாடுதுறை மாவட்டத்தில் மறை யூர், சேத்தூர், காஞ்சிவாய், பருத்தி குடி, மங்கைநல்லூர், முத்தூர், கடக்  கம் உள்ளிட்ட 10 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு நிர்  வாகிகள் ஆர்.ரவீந்திரன், ம.மாரி யப்பன், என்.பாரதி, சேத்தூர் மார்க்ஸ், ஜி.வைரவன், சங்க ரய்யா, என்.முரளி, கே.என்.ஸ்டா லின், எஸ்.கருணாநிதி, முரளி ஆகி யோர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், தேங்கி இருக்கும் நெல் மூட்டைகளை உட னடியாக தற்காலிக குடோன் அமைத்து டிபிசியில் உள்ள நெல்  மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தியும், தேங்கி இருக்கும் மூட்டையால் ஏற்படும் நஷ்டத்தை தொழிலாளிகள் மீதும் (பி.சி) பட்டி யல் எழுத்தர்கள் மீதும் போடுவதை கைவிட வலியுறுத்தியும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்தை அதிகப்படுத்த வலி யுறுத்தியும், சுமை தூக்கும் தொழி லாளிகளுக்கு மூட்டை ஒன்றுக்கு  ரூ.30 வீதம் வழங்கிட வலியுறுத் தப்பட்டன.