districts

img

ரேசன் கடையில் பொருட்களை தடையின்றி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகூர் ஊராட்சியில் உள்ள ரேசன் கடையில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் தடையின்றி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது.  கூகூர் கிளைச் செயலாளர் ஜி.முருகன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஒன்றியச் செய லாளர் எஸ்.பழனிவேல் உட்பட கிளைச் செய லாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் மற்றும் பொதுமக்கள் ரேசன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணம் வட்ட வழங்கல் அதிகாரி அருள் பிரகாசம், கூட்டுற வுத் துறை சார் பதிவாளர் ரவிச்சந்திரன் ஆகி யோர், சிபிஎம் உறுப்பினர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.  அதில், “கூகூர்  ரேசன் கடையில் முறைகேடு நடப்பதை தவிர்க்க வேண்டும். வேலை நாட்களில் அத்தி யாவசியப் பொருள்களை தடையின்றி வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலை யில் உள்ள கூகூர் ரேசன் கடையை அப்புறப் படுத்தி, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்  என கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை மேற்படி அதி காரிகள் ஏற்றுக்கொண்டு விரைவில் நடவ டிக்கை எடுப்பதாகவும், இன்று முதல் தொ டர்ந்து வேலை நாட்களில் ரேசன் கடை திறந்து  இருக்கும். ரேசன் கடைக்கு நிரந்தரமாக பணி யாளர் அமர்த்தப்படுவார் என உறுதி அளித்த னர். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலி கமாக விலக்கி கொள்ளப்பட்டது.