கடலூர், பிப்.13- பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கோவஸ்ரீ மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மரணத்திற்கு காரணமான குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த வேண்டும். பள்ளி மாணவி மரண வழக்கில் குழந்தைகள் நல அமைப்பு உடனடியாக விசாரணைக்கு உத்தர விட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.கீதா, வி. மேரி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாதர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் எஸ்.ரேவதி, பண்ருட்டி வட்டச் செயலாளர் கலா, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.அமுதா, எஸ்.அம்சா யால், விமலா, தனலட்சுமி, கடலூர் மாநகர தலைவர் சாந்தகுமாரி, மாநகர செயலாளர் மனோரஞ்சிதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.