districts

img

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.25 - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்  தலைவர் என்.செல்லத்துரை தலைமை  வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலை வர் முகமது அலி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அம்மனுவில், “தமிழக அரசு, பால்  உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை சுமார் ரூ.100  கோடியை, கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை. தீபாவளிக்குள் உடனடியாக வழங்க வேண்டும். கால்ந டைத் தீவனங்கள் மற்றும் அத்தியாவ சியப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பா லுக்கு 1 லிட்டருக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். தரமான கால்நடைத் தீவனங்களை தமிழ்நாடு அரசு 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். 2021  இல் ஆவின்பால் விற்பனை விலையில் 1  லிட்டருக்கு ரூ.3-ஐ தமிழ்நாடு அரசு  குறைத்ததால் ஆவினுக்கு இதுவரை  ஏற்பட்ட ரூ.900 கோடியை வழங்கி  நட்டத்தை ஈடு செய்ய வேண்டும்.  ஆரம்ப சங்கங்களின் செயல்பாடுகளுக் காக ஒதுக்கக் கூடிய 1 லிட்டருக்கு ரூ. 1.25-ஐ 50 காசுகள் உயர்த்தி ரூ.1.75 என  வழங்க வேண்டும். வேளாண் பொருள்களுக்கு கொள்முதல் விலை அறிவிப்பதைப் போல பாலுக்கும் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு கொள்முதல்  விலையை அறிவிக்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் தமிழ்நாட்டில்  தினமும் ஒரு கோடி லிட்டர் என உயர்த்த வேண்டும். முதல் கட்டமாக 50  லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும். இதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஆவினுக்கு ஆணையர் மற்றும் மாநில இணையம் ஆகியவற்றிற்கு தனித் தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத் தில், 19.11.2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கறவை மாடுகளு டன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் முகமது அலி தெரி வித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.