districts

சிபிஎம் தலைவர்கள் மீது பொய் வழக்கு காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஜூன் 5-  

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்குப் பதியும் பாபநாசம் காவல்துறையினரை கண்டித்து பாபநாசம் அண்ணா சிலை அருகில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், மாதர் சங்க செயலாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் பேசினர்.  

    சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான டெல்லி பாபு பேசுகையில், ‘‘சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலாளர் முரளிதரன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இதில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் எங்களது போராட்டம் தொடரும்’’ எனக் கூறினார்.  

    இதில் மாவட்டக் குழு காதர் உசேன், விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.