districts

img

மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: உழைக்கும் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக.20 - மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா கேஜிஆர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயின்ற மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்பு ணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து திருவாரூர் ரயில்  நிலையம் அருகில் திங்களன்று சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட கன்வீனர் இரா.மாலதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோ மதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஏ. பிரேமா ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.