இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவினை கண்டித்து, மன்னார்குடி எல்ஐசி அலுவலக வாயிலில் ஊழியர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் ரசக் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.