மயிலாடுதுறை, டிச.31- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள இளையாளூர் ஊராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வடகரையில் உள்ள இளையாளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய தலைவர் அனீஷ் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளை பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அறிவழகன், ஒன்றியச் செயலாளர் சபீர் அகமது, பொரு ளாளர் கபிலன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். அரங்கக்குடி மதினா தெரு, புலி கண்ட முத்தூர் பாலம் முதல் மில்லத்தூர் மூலக்கரை வரை புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும். புது தெருவில் வெள்ள நீர் புகுவதை தடுத்து உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். வடிகால் வாய்க்கால்களை மக்கள் பயன்பாட்டிற்காக சீரமைத்துத் தர வேண்டும். இளையாளூர் தெற்கு தெருவில் பாழ டைந்த தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.